பக்கங்கள்

பக்கங்கள்

28 ஏப்., 2015

ஜோன் கெரி எதிர்வரும் சனிக்கிழமை இலங்கை வருகிறார்

அமெரிக்க இராஜாங்க செயலாளர் ஜோன் கெரி எதிர்வரும் சனிக்கிழமை இலங்கை விஜயம் மேற்கொள்ளவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இவர் தனது விஜயத்தின் போது ஜனாதிபதி, பிரதமர், வெளிவிவகார அமைச்சர் மங்கள சமரவீர உட்பட அரச அதிகாரிகள் பலரைச் சந்தித்து கலந்துரையாடவுள்ளார்.
எனினும், இவரது விஜயத்தின் போது வட மாகாணத்துக்கு செல்ல மாட்டார் என அரசாங்க வட்டாரங்கள் குறிப்பிட்டுள்ளன.
அதேவேளை,  மனித உரிமைகள், ஜனநாயகம் தொடர்பிலான அம்சங்கள் குறித்து இவர் கவனம் செலுத்தவுள்ளதாக சிங்கள ஊடகமொன்று தெரிவித்துள்ளது.