பக்கங்கள்

பக்கங்கள்

13 மே, 2015

எதிர்வரும் புதன்கிழமை பாராளுமன்றம் கலைக்கப்படலாம்


பாராளுமன்றம் எதிர்வரும் புதன்கிழமை கலைக்கப்படலாம் என்று அரசியல் வட்டாரங்களில் பரபரப்பாகப் பேசப்படுவதாக கொழும்பு ஆங்கில நாளிதழ் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது.
அதேவேளை, எதிர்வரும் 22ம் திகதி வெள்ளிக்கிழமை பாராளுமன்றம் கலைக்கப்படலாம் என்றும் சில தகவல்கள் தெரிவிக்கின்றன.
தேர்தல் முறை மாற்றம் தொடர்பான 20வது திருத்தச்சட்டம் இன்று அமைச்சரவையில் விவாதிக்கப்பட்டு, எதிர்வரும் 19ம் திகதி பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்படவுள்ளது.
இந்த திருத்தச்சட்டம் நிறைவேற்றப்பட்டதும் பாராளுமன்றம் கலைக்கப்படும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.
20வது திருத்தச்சட்டம் நிறைவேற்றப்பட்டாலும் சரி, நிறைவேற்றப்படா விட்டாலும் சரி, பாராளுமன்றம் கலைக்கப்பட வேண்டும் என்பதில் ஐதேக உறுதியாக இருக்கிறது.