பக்கங்கள்

பக்கங்கள்

15 மே, 2015

ந்தேகத்தின் பேரில் மூவர்...மாணவியின் உறவினர்கள் என தெரிய வந்ததாக பொலிஸார்


புங்குடுதீவு மாணவி பலாத்காரம் செய்யப்பட்டு கொலை செய்யப்பட்டமை குடும்பப் பகையே காரணம் என பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.
புங்குடுதீவு மகாவித்தியாலய மாணவி கொலை செய்யப்பட்டமை தொடர்பில் சந்தேகத்தின் பேரில் மூவர் கைது செய்யப்பட்டனர். அவர்களிடம் பெற்ற வாக்கு மூலத்தின் அடிப்படையில் அவர்கள் மூவரும் கொலை செய்யப்பட்ட மாணவியின் உறவினர்கள் என தெரிய வந்ததாக பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.
சந்தேகநபர்கள் மூவரும் இன்று வெள்ளிக்கிழமை ஊர்காவற்றுறை நீதிவான் நீதிமன்றில் ஆஜர்ப்படுத்தப்பட்டனர். இதன்போதே இந்தத் தகவலை நீதிமன்றில் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இதேவேளை சந்தேகநபர்கள் ஊர்காவற்றுறை நீதிமன்றில் முற்படுத்தப்பட்ட வேளை நீதிமன்றின் முன்பாக கூடிய பொதுமக்கள் மாணவின் கொலைக்கு நீதி வழங்கக் கோரி ஆர்ப்பட்டத்தில் ஈடுபட்டமை குறிப்பிடத்தக்கது.