பக்கங்கள்

பக்கங்கள்

14 மே, 2015

ஜெ. வழக்கில் அப்பீல்: ஆச்சார்யாவுக்கு கர்நாடக சட்டத்துறை செயலர் கடிதம்

சொத்துக்குவிப்பு வழக்கில் ஜெயலலிதாவை விடுதலை செய்த கர்நாடக உயர் நீதிமன்றத்தின் தீர்ப்பை எதி
ர்த்து மேல்முறையீடு செய்வது குறித்து ஆலோசனை வழங்குமாறு அரசு வழக்கறிஞர் ஆச்சார்யாவுக்கு, கர்நாடக சட்டத்துறை செயலர் கடிதம் எழுதியுள்ளார்.வருமானத்துக்கு அதிகமாக சொத்து சேர்ந்த வழக்கில் ஜெயலலிதா, அவரது தோழி சசிகலா மற்றும் இளவரசி, சுதாகரன் ஆகியோரை விடுதலை செய்து கர்நாடக உயர் நீதிமன்ற சிறப்பு நீதிபதி குமாரசாமி கடந்த 11ஆம் தேதி தீர்ப்பளித்தார்.
இந்த தீர்ப்பில் பிழை இருப்பதாகவும், தீர்ப்பை எதிர்த்து கர்நாடக அரசு மேல்முறையீடு செய்ய வேண்டும் என்றும் தமிழகத்தில் உள்ள எதிர்க்கட்சிகள் வலியுறுத்தி வருகின்றன.

இந்நிலையில், கர்நாடக உயர் நீதிமன்ற தீர்ப்பை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்வது குறித்து ஆலோசனை நடத்த கோரி அரசு தரப்பு வழக்கறிஞர் ஆச்சார்யாவுக்கு கர்நாடக சட்டத்துறை செயலர் சங்கப்பா இன்று கடிதம் எழுதியுள்ளார்.

இந்த ஆலோசனைக்கு பின்னர் உச்ச நீதிமன்றத்தில் கர்நாடக அரசு மேல்முறையீடு செய்யும் என எதிர்பார்க்கப்படுகிறது.