பக்கங்கள்

பக்கங்கள்

26 ஜூன், 2015

இலங்கை நாடாளுமன்றம் கலைக்கப்பட்டது.ஆகஸ்ட்17 இல் தேர்தல்


நாடாளுமன்றம் சற்று முன்னர் கலைக்கப்பட்டதாக நம்பகரமான வட்டாரங்களிலிருந்து தெரியவந்துள்ளது. இன்று நள்ளிரவு முதல் நடைமுறைக்கு வரும் வகையில் ஜனாதிபதியினால் கலைக்கப்பட்டுள்ளது
இது தொடர்பில் வர்த்தமானிக்கான அறிவித்தல் அரச அச்சகத்துக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக அரசாங்க அச்சகர் தெரிவித்துள்ளார்.
இதனையடுத்து இன்று நள்ளிரவில் வர்த்தமானி வெளியிப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இன்று நள்ளிரவு வெளியாகும் சிறப்பு வர்த்தமானியில், நாடாளுமன்றத் தேர்தலுக்கான அறிவிப்பும் வெளியிடப்படும் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.