பக்கங்கள்

பக்கங்கள்

2 ஜூன், 2015

பாஜக மூத்த தலைவர் சுப்பிரமணிய சாமிக்கு ஜாமீனில் வர முடியாத பிடி வாரண்டு


பா.ஜனதா மூத்த தலைவர் சுப்பிரமணிய சாமி, கடந்த மார்ச் 15-ந் தேதி அசாம் மாநிலத்தில் உள்ள காசிரங்கா பல்கலைக்கழகத்தில் நடைபெற்ற கூட்டத்தில் பங்கேற்று பேசினார். அதில் மசூதிகள் தொடர்பாக அவர் பேசியது  வெறுப்புணர்வை தூண்டும் வகையில் இருந்ததாக கூறி, அவருக்கு எதிராக அசாம் மாநிலம் கரிம்கஞ்ச் கோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டது. 

இவ்வழக்கில், அவருக்கு மார்ச் 19-ந் தேதி கோர்ட்டு சம்மன் பிறப்பித்தது. ஆனால், அவர் கோர்ட்டில் ஆஜராகவில்லை. இந்நிலையில், சுப்பிரமணிய சாமிக்கு எதிராக ஜாமீனில் வர முடியாத பிடிவாரண்டு பிறப்பித்து அசாம் கோர்ட்டு உத்தரவிட்டுள்ளது. 30-ந் தேதியோ அல்லது அதற்கு முன்போ பிடி வாரண்டை செயல்படுத்துமாறு கூறியுள்ளது.

இதையடுத்து, இந்த உத்தரவுக்கு எதிராக சுப்பிரமணிய சாமி இன்று சுப்ரீம் கோர்ட்டை அணுகினார். நீதிபதிகள் பி.சி.பந்த், அமிதவா ராய் ஆகியோர் அடங்கிய விடுமுறைக்கால பெஞ்ச் முன்பு முறையிட்டார். உரிய காலத்தில் மனு விசாரணைக்கு எடுக்கப்படுவதற்கு தேவையான நடைமுறைகளை செய்யுமாறு அவருக்கு நீதிபதிகள் அறிவுறுத்தினர்.