பக்கங்கள்

பக்கங்கள்

13 ஜூன், 2015

கொக்குளாயில் விகாரை அமைக்கும் பணி இடைநிறுத்தம்

கொக்கிளாய் பகுதியில் தனியார் காணியில் அத்துமீறி கட்டப்பட்டுவந்த விகாரையை அமைக்கும் பணியானது இடைநிறுத்தப்பட்டுள்ளது.

 
காணிப்பிணக்குகளை தீர்க்கும் பொருட்டு நேற்று முல்லைத்தீவு கச்சேரியில் கூடிய காணி அமைச்சின் உயரதிகாரிகளின் நடமாடும் சேவையிலேயே மேற்படி முடிவு எட்டப்பட்டிருந்தது.
 
இது தொடர்பில் வடக்கு மாகாண சபை உறுப்பினர் து. ரவிகரன் தெரிவிக்கையில், 
 
பிரதேச செயலாளர் மாகாணக்காணி ஆணையாளர் போன்ற அதிகாரிகளால் தீர்க்கப்படாத முல்லைத்தீவு மாவட்ட காணிப்பிணக்குகளை தீர்த்து வைப்பதற்காக முல்லைத்தீவு கச்சேரியில் நேற்று காணி ஆணையாளர் நாயகம் உட்பட காணி ஆணையாளர் நாயகம் திணைக்களம், காணி அமைச்சு என்பவற்றை சேர்ந்த உயரதிகாரிகள் கலந்து கொண்ட நடமாடும் சேவை நடைபெற்றது. 
 
கொக்கிளாய் மக்களின் குடியிருப்பு காணிகளில் அத்துமீறி விகாரை அமைத்துவரும் பிணக்கானது முன்னிலைப்படுத்தப்பட்டபோது இந்தக்காணிக்கு சரியான தீர்வு எட்டப்படும் வரை அவ்விகாரையின் கட்டுமானப்பணிகள் உடனடியாக இடைநிறுத்தப்படுவதற்குரிய நடவடிக்கையை எடுக்குமாறு முல்லைத்தீவு கரைதுறைப்பற்று பிரதேச செயலருக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.
 
மேற்படி விபரங்களானவை காணி உரிமையாளர்களால் தனக்கு தெரிவிக்கப்பட்டன என்றும் அவர் மேலும் தெரிவித்திருந்தார்.