பக்கங்கள்

பக்கங்கள்

29 ஜூன், 2015

ஊடகங்களுக்கு தடை விதித்தார் யாழ். அரச அதிபர்


மீள்குடியேற்ற அமைச்சர் சுவாமிநாதனுக்கும் யாழ். மாவட்ட அதிகாரிகளுக்கும் இடையிலான சந்திப்பொன்று மாவட்ட செயலகத்தில் தற்போது இடம்பெற்று வருகின்றது. இதற்கான செய்திகளை சேகரிக்கச் சென்ற ஊடகவியலாளர்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டுள்ளது.  
 
மேலும், இது அரசியல் கூட்டம் இல்லை எனவும் அபிவிருத்தி தொடர்பிலான அலுவலக கூட்டம் என்றும் கடும் தொனியில் கூறிய யாழ். அரச அதிபர் வேதநாயகன் அங்கு செய்தி சேகரிப்பில் ஈடுபட்டிருந்த ஊடகவியலாளர்களை வெளியேறும் படி உத்தரவிட்டுள்ளார்.