பக்கங்கள்

பக்கங்கள்

17 ஆக., 2015

நெடுந்தீவில் இருந்து உலங்கு வானூர்தி மூலம் எடுத்துச் செல்லப்பட்ட யாழ் வாக்குப் பெட்டிகள்


இலங்கையின் 15ஆவது நாடாளுமன்ற தேர்தல் வாக்களிப்பு நடவடிக்கைகள் சற்று முன்னர் நிறைவடைந்த நிலையில் வாக்கெண்ணும் நிலையத்துக்கு மிகவும் பலத்த பாதுகாப்போடு வாக்குப் பெட்டிகள் எடுத்துச் செல்லப்பட்டன.
யாழ் தேர்தல் தொகுதிகளில் வாக்களிப்புக்கள் நிறைவடைந்த நிலையில் வாக்கெண்ணும் நிலையமான யாழ் மத்திய கல்லூரிக்கும் பேருந்துக்களிலும் உலங்கு வானூர்தி மூலமும் பாதுகாப்பாக வாக்குப்பெட்டிகள் எடுத்துச்செல்லப்பட்டுள்ளன.

இன்னும் சில மணித்தியாலத்தின் பின்னர் வாக்கெண்ணும் பணிகள் ஆரம்பமாகவுள்ளன.