பக்கங்கள்

பக்கங்கள்

3 செப்., 2015

எதிர்க்கட்சித் தலைவராக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் இரா.சம்பந்தன்

இலங்கையின் 8 ஆவது பாராளுமன்றத்தின் எதிர்க்கட்சித் தலைவராக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் இரா.சம்பந்தன் தெரிவு செய்யப்பட்டுள்ளார்.
இதனை இன்றைய தினம் சபாநாயகர் கரு ஜயசூரிய தெரிவித்துள்ளார்.
ஐக்கிய மக்கள் சுதந்திரக்கூட்டமைப்பின் சார்பில் எதிர்கட்சித் தலைவருக்கான கோரிக்கையும் முன்வைக்கப்படாமை காரணமாக இரா.சம்பந்தனே எதிர்க்கட்சித் தலைவராக தெரிவு செய்யப்படுவதாக தெரிவித்தார்.
இதன்படி, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்றக் குழுத் தலைவரான சம்பந்தன் எதிர்க்கட்சித் தலைவராக தெரிவு செய்யப்படுவார்.
சுமார் மூன்று தசாப்தங்களின் பின்னர் தமிழர் ஒருவர் நாட்டின் நாடாளுமன்றின் எதிர்க்கட்சித் தலைவராக சம்பந்தன் தெரிவு செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.