பக்கங்கள்

பக்கங்கள்

2 செப்., 2015

ஜனாதிபதியின் உரையில் உள்ளடங்காத இனப்பிரச்சினை : கவலையில் கூட்டமைப்பினர் 
ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் கொள்கைப் பிரகடன உரையில், இனப்பிரச்சினைக்கான தீர்வு குறித்து குறிப்பிடப்படாமை கவலையளித்துள்ளதாக, தமிழ்த் தேசியக்
கூட்டமைப்பினர் தெரிவித்துள்ளனர்.

புதிய அரசாங்கத்தின் முதலாவது நாடாளுமன்ற அமர்வில், இன்று  ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன சிறப்புரையாற்றினார்.

குறித்த உரை தொடர்பில், நாடாளுமன்றம் ஒத்திவைக்கப்பட்டதன் பின்னர் ஊடகங்களுக்கு கருத்துத் தெரிவித்த கூட்டமைப்பினர் இவ்வாறு குறிப்பிட்டனர்.

எனினும், நாட்டில் நல்லிணக்கத்தை ஏற்படுத்துவது குறித்து ஜனாதிபதி தமது உரையில் விசேட கவனம் செலுத்தியிருந்தமையும், அதனை தேசிய அரசாங்கத்தின் பிரதான கொள்கையாக கொண்டுள்ளமையும் தமக்கு மகிழ்ச்சியளிப்பதாக கூட்டமைப்பினர் மேலும் தெரிவித்தனர்.