பக்கங்கள்

பக்கங்கள்

13 அக்., 2015

அரசியல் கைதிகளின் விடுதலையை வலியுறுத்தி அடையாள உண்ணாவிரத போராட்டம் யாழில்

வடமாகாண  இளையோர் அமைப்பால் அரசியல் கைதிகளின் விடுதலையை வலியுறுத்தி அடையாள உண்ணாவிரத போராட்டம்
நல்லூர் முன்றலில் காலை 8மணிக்கு ஆரம்பமாகி இடம்பெற்று வருகின்றது
குறித்த போராட்டத்தில் யாழ் - கிளிநொச்சி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் ஈ.சரவணபவன்,வடமாகாண சபை அவைத்தலைவர் சி.வி.கே சிவஞானம், வடமாகாணசபை உறுப்பினர்களான சுகிர்தன், கஜதீபன், பரஞ்சோதி , அஸ்மின், மற்றும் எதிர்க்கட்சித் தலைவரான தவராசா ஆகியோர் கலந்து கொண்டுள்ளனர்.
இதேவேளை அரசியல் கைதிகள் தமது உண்ணாவிரத போரட்டத்தை நேற்று ஆரம்பித்து இன்று 2ஆவது நாளாகவும் தொடர்ந்து முன்னெடுத்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.