பக்கங்கள்

பக்கங்கள்

27 அக்., 2015

இந்திய கிரிக்கெட் அணியின் சுழற்பந்து வீச்சாளர் அமித் மிஸ்ரா கைது


கடந்த செப்டம்பர் மாத இறுதி யில் பெங்களூருவில் நடைபெற்ற பயிற்சி ஆட்டத்தில் இந்திய கிரிக்கெட் அணியின் சுழற்பந்து வீச்சாளர் அமித் மிஸ்ரா பங்கேற்றார். அப்போது பெங்களூருவில் உள்ள நட்சத்திர விடுதியில் பெண் தோழியை சந்தித்த போது இருவருக்கும் இடையே சண்டை ஏற்பட்டுள்ளது. இதில் அமித் மிஸ்ரா அவரை தகாத வார்த்தைகளில் திட்டி, கடுமையாக தாக்கியுள்ளார்.

இது தொடர்பாக அந்த பெண் அசோக் நகர் காவல் நிலையத்தில் கடந்த செப்டம்பர் 27-ம் தேதி அமித் மிஸ்ரா தன்னை பாலியல் ரீதியாக தாக்கியதாக புகார் அளித்தார். இதன் அடிப்படையில் அமித் மிஸ்ரா மீது இந்திய தண்டனை சட்டம் 354 மற்றும் 328 ஆகிய பிரிவுகளின் வழக்கு பதிவு செய்யப்பட்டது. மேலும் வருகிற 27-ம் தேதிக்குள் அமித் மிஸ்ரா நேரில் ஆஜராகி விளக்கம் அளிக்க வேண்டும் என சம்மன் அனுப்பப்பட்டது.

இதையடுத்து, பெங்களுரூ போலீஸ் முன் இன்று விசாரணைக்கு ஆஜரான அமித் மிஸ்ராவிடம் 3 மணி நேரம் விசாரணை நடத்திய போலீசார் அவரை கைது செய்தனர். இருப்பினும், உடனடியாக அமித் மிஸ்ரா  ஜாமீனில் விடுவிக்கப்பட்டார்.