பக்கங்கள்

பக்கங்கள்

22 நவ., 2015

மஹிந்த தரப்பின் ஒரு தொகுதியினர் மைத்திரியுடன் இணையத் தீர்மானம்


முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவிற்கு ஆதரவளித்து வந்த ஒரு தொகுதியினர், ஜனாதிபதி மைத்திரியுடன் இணைந்து கொள்ளத் தீர்மானித்துள்ளனர்.
எதிர்கால அரசியலை ஜனாதிபதி மைத்திரிபாலவுடன் இணைந்து மேற்கொள்ள இணக்கம் வெளியிட்டுள்ளனர்.
அண்மையில் நடைபெற்ற சர்வகட்சிக் கூட்டத்தின் போது இந்த விடயம் குறித்து பேசப்பட்டுள்ளது.
இதேவேளை, இவ்வாறான இணக்கப்பாடு எதுவும் ஏற்படுத்திக் கொள்ளப்படவில்லை என நாடாளுமன்ற உறுப்பினர் தினேஸ் குணவர்தன தெரிவித்துள்ளார்.
கூட்டணி அமைப்பது குறித்து உத்தியோகபூர்வமாக இணங்கவில்லை என அவர் குறிப்பிட்டுள்ளார்.