அவதூறு வழக்கு விசாரணைக்காக ஐகோர்ட்டில் ஆஜர் ஆனார் கலைஞர்
முதலமைச்சர் ஜெயலலிதா தொடர்ந்த அவதூறு வழக்கில் திமுக தலைவர் கலைஞர் சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் விசாரணைக்காக இன்று காலை 10 மணிக்கு ஆஜர் ஆனார். வழக்கை விசாரித்த நீதிபதி ஆதிநாதன், வழக்கு விசாரணையை மார்ச் மாதம் 10ம் தேதிக்கு ஒத்திவைத்தார்