பக்கங்கள்

பக்கங்கள்

19 ஜன., 2016

கூட்டமைப்பின் ஆணைக்கேற்பவே நாடாளுமன்றம் செயற்படுகிறதாம்!

நாடாளுமன்றம் பொது மக்களின் கருத்துகளுக்கு இடமளிக்காது, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் ஆணைக்கேற்பவே செயற்படுவதாக பெங்கமுவ நாலக தேரர் தெரிவித்துள்ளார்.

கொழும்பில் இன்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு கருத்து தெரிவித்த போதே அவர் இதனை தெரிவித்துள்ளார்.

அரசியலமைப்பில் மாற்றம் கொண்டு வர முயற்சிக்கும் செயலானது, நாட்டை இரண்டாக பிரிப்பதற்கான ஓர் ஆரம்பம் என பெங்கமுவ நாலக தேரர் தெரிவித்துள்ளார். அத்துடன், புதிய அரசியலமைப்பில் பௌத்த பிக்குகளுக்கான உரிமைகளும் உள்வாங்குவது தொடர்பில் தாம் மாநாயக்க தேரர்களுடன் கலந்துரையாடியுள்ளதாக அவர் மேலும் தெரிவித்துள்ளார்.