பக்கங்கள்

பக்கங்கள்

31 ஜன., 2016

சிராந்தி ராஜபக்ச நாளை ஜனாதிபதி ஆணைக்குழுவிற்கு அழைப்பு

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவின்  துணைவியார் சிராந்தி ராஜபக்சவிடம் வாக்குமூலம் ஒன்றைப் பெற்றுக்கொள்ள நாளை பாரிய நிதி மோசடிகள் தொடர்பில் விசாரணைகளை மேற்கொள்ளும் ஜனாதிபதி ஆணைக்குழுவிற்கு அழைக்கப்பட்டுள்ளார்.
தனது ஊடகச் செயலாளருக்கு குறைந்த பெறுமதிக்கு வீடொன்றை வழங்குமாறு தேசிய வீடமைப்பு அபிவிருத்தி அதிகார சபைக்கு வழங்கிய உத்தரவு தொடர்பில் வாக்குமூலம் ஒன்றைப் பெற்றுக் கொள்ளவே சிராந்தி ராஜபக்ச அழைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது
இத்தகலை பாரிய நிதி மோசடிகள் தொடர்பில் விசாரணைகளை மேற்கொள்ளும் ஜனாதிபதி ஆணைக்குழுவின் செயலாளர் லேசில் த சில்வா உறுதிப்படுத்தியுள்ளார்.
கஹதுடுவ பிரதேசத்தில் உள்ள குறித்த வீடு 5 லட்சம் என தெரிவிக்கப்பட்டுள்ள போதும், அதன் சரியான பெறுமதி 55 லட்சம் என மதிப்பிடப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிகின்றன.