பக்கங்கள்

பக்கங்கள்

16 பிப்., 2016

வவுனியாவில் 13 வயது பாடசாலை மாணவி கொலையா? தற்கொலையா?

வவுனியா உக்குளாங்குளம் 04ம் ஒழுங்கையில் 13 வயதுடைய பாடசாலை  மாணவி தூக்கில் தொங்கிய  நிலையில் சடலமாக
மீட்கப்பட்டுள்ளார்.
சம்பவம் தொடர்பாக தெரிய வருவதாவது,
வவுனியா உக்குளாங்குளம் 04ம் ஒழுங்கையில் வசித்து வரும் பாடசாலை மாணவி இன்று மதியம் 02.00 மணியளவில் தூக்கில் தொங்கிய நிலையில் சடலமாக மீட்கப்பட்டார். இன்று காலை 07.30 மணியளவில் தாயார் வேலைக்கு சென்ற போது வீட்டில் தனியாக இருந்த கரிஸ்னவி (வயது 13) மர்மமான முறையில் தூக்கில் தொங்கிய நிலையில் காணப்பட்டார்.
02.30 மணியளவில் தாயார் வீட்டிற்கு சென்ற போது தூக்கில் தொங்கிய தனது மகளை தூக்க கயிற்றினை கழற்றி மீட்டெடுத்தார். தாயார் அறைக்கு சென்று பார்த்த போது அறை முழுவதும் அலங்கோலமான நிலையில் காணப்பட்டது.
இவ்விடயம் தொடர்பாக தாயார் கருத்து தெரிவிக்கையில்
இன்று காலை எனக்கம் எனத மகளுக்கும் ஏற்பட்ட கருத்த முரண்பாட்டினால் பாடசாலை செல்லாமல் விட்டில் தனியாக இருந்தார் நான் கடமை முடிந்து வீடு சென்று பார்க்கும் போது தூக்கில் தொங்கிய நிலையில் காணப்பட்டார்.இக் கொலையில் சந்தேகம் இருப்பதாக தாயார் எமது செய்தியாளரிடம் தெரிவித்தார்
சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணையினை வவுனியா பொலிஸார் மேற்கொள்கின்றனர்.