பக்கங்கள்

பக்கங்கள்

18 ஜூன், 2016

யாழ் விளையாட்டு அரங்கத்தை காணொளி காட்சி மூலம் திறந்து வைத்தார் மோடி

இலங்கையில் உள்ள யாழ்ப்பாணத்தில் துரையப்பா விளையாட்டு அரங்கம் உள்ளது. இந்த விளையாட்டு அரங்கம் 1997–ம்
ஆண்டு முதல் பயன்படுத்தப்படாமல் இருந்து வந்தது.
இந்தநிலையில் ரூ.7 கோடி செலவில் இந்திய அரசால் புதுப்பிக்கப்பட்டுள்ளது. 1,850 பேர் அமரும் வகையில் இடவசதி அமைக்கப்பட்டுள்ளது.
இந்திய அரசால் புதுப்பிக்கப்பட்ட துரையப்பா விளையாட்டு அரங்கத்தை பிரதமர் நரேந்திர மோடியும், இலங்கை அதிபர் மைத்ரிபால சிறிசேனாவும் இன்று (சனிக்கிழமை) கூட்டாக சேர்ந்து இலங்கை மக்களுக்கு அர்ப்பணித்து வைத்தனர்.. நரேந்திர மோடி புதுடெல்லியில் இருந்தவாறு காணொளி காட்சி மூலம் இந்த விளையாட்டு அரங்கு அர்ப்பணிப்பு விழாவில் பங்கேற்று பொத்தானை அழுத்தி திறந்து வைத்தார்.
இந்த நிகழ்வின் போது வெளியுறவுத்துறை அமைச்சர் சுஷ்மா சுவராஜ், வெளியுறவுச்செயலர் ஜெய்சங்கர் உள்ளிட்டோர் உடன் இருந்தனர்.
புதுப்பிக்கப்பட்ட விளையாட்டு அரங்கில் நடைபெறும் முதல் பெரிய நிகழ்ச்சியாக இரண்டாவது சர்வதேச யோகா தினம் கொண்டாடப்படவுள்ளதையொட்டி ,யாழ்ப்பாணத்தில் உள்ள மாணவர்கள் யோகா பயிற்சியில் ஈடுபட்டு வருகின்றனர்.
யோகா செயல்விளக்க நிகழ்ச்சியில் சுமார் ஏறக்குறைய 8 ஆயிரம் பேர் பங்கேற்றனர்.
இதனை பிரதமர் மோடியும் இலங்கை அதிபர் சிறிசேனாவும் பார்வையிட்டு வருகின்றனர்.