பக்கங்கள்

பக்கங்கள்

26 ஆக., 2016

ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழு முன் அமைச்சர் ரிஷாத் ஆஜர்

கைத்தொழில் மற்றும் வர்த்தக அமைச்சர் ரிஷாத் பதியுதீன் ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழு முன்னிலையில் இன்று காலை ஆஜராகியுள்ளார். 

ச.தொ.ச நிறுவனத்தினால் அரிசி இறக்குமதி செய்யப்பட்ட போது இடம்பெற்றதாக கூறப்படும் நிதி மோசடி சம்பந்தமாக மேற்கொள்ளப்படும் விசாரணைக்கு அமைவாக வாக்குமூலம் பெறுவதற்காக அமைச்சர் ரிஷாத் பதியுதீன் அங்கு வரவழைக்கப்பட்டுள்ளார். 

தற்போது ச.தொ.ச நிறுவனத்திற்கு பொறுப்பான அமைச்சராக ரிஷாத் பதியுதீன் இருப்பதால் அவரிடம் வாக்குமூலம் பெற வேண்டி உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.