பக்கங்கள்

பக்கங்கள்

22 ஆக., 2016

தன்னை பாலியல் வல்லுறவுக்கு உட்படுத்தியதாக யுவதி பொலிஸில் முறைப்பாடு

தொழில் வாய்ப்பை பெற்று தருவதாக கூறி அமைச்சரின் செயலாளர் ஒருவர் தன்னை பாலியல் வல்லுறவுக்கு உட்படுத்தியதாக யு
வதி ஒருவர் பொலிஸில் முறைப்பாடு செய்துள்ளார்.
வல்லுறவுக்கு உட்படுத்தப்பட்டதாக கூறப்படும் 20 வயதான யுவதி அம்பலாங்கொடை பொலிஸ் நிலையத்தில் இந்த முறைப்பாட்டை செய்துள்ளார்.
கதிர்காமம் பிரதேசத்தில் குறித்த நபர் தன்னை பாலியல் வல்லுறவுக்கு உட்படுத்தியதாக யுவதி தனது முறைப்பாட்டில் கூறியுள்ளார்.
ஹம்பாந்தோட்டை பிரதேச எதிர்க்கட்சி அரசியல்வாதியான இந்த நபர், ஹம்பாந்தோட்டை மாவட்டத்தை சேர்ந்த அமைச்சர் ஒருவரின் இணைப்புச் செயலாளராகவும் பதவி வகித்து வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.