பக்கங்கள்

பக்கங்கள்

22 பிப்., 2017

கோவில் திருவிழாவில் 65 அடி உயர தேர் கவிழ்ந்து 10 பேர் காயம்





கர்நாடகா மாநிலம் பெல்லாரியில் உள்ள கொட்டுரேஸ்வர கோவில் தேர் திருவிழாவில் கலந்துக்கொண்ட ஆயிரக்கணக்கானோர்
பக்தியுடன் 65 அடி உயர தேரை இழுத்துக்கொண்டிருந்தனர். அப்போது திடீரென தேர் கவிழ்ந்து பக்தர்கள் மீது விழுந்துள்ளது. இதில் தேரின் சக்கரத்தில் சிக்கி பலர் காயமடைந்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

இந்த விபத்தில் 10 பேர் காயமடைந்துள்ளதாக முதற்கட்ட தகவல்கள் வெளியாகியுள்ளது. எனினும், விபத்தால் ஏற்பட்ட சேதங்கள் குறித்து இதுவரை அதிகாரப்பூர்வ தகவல் ஏதும் வெளியாகவில்லை.