பக்கங்கள்

பக்கங்கள்

3 மார்., 2017

அதிமுகவை கைப்பற்ற பன்னீர்செல்வம் அணி தீட்டும் அதிரடி திட்டம்

சசிகலாவிற்கு எதிராக ஓ.பி.எஸ் களம் இறங்கிய பின், ஓ.பி.எஸ் அணி, சசிகலா அணி என அதிமுக இரண்டாக உடைந்தது அனைவரும் அறிந்ததே.

சட்டசபையில் எடப்பாடி பழனிச்சாமி கொண்டு வந்த வாக்கெடுப்பு தீர்மானத்திற்கு 122 எம்.எல்.ஏக்கள் ஆதரவு தெரிவித்ததால், ஒ.பி.எஸ்-ஸால் மீண்டும் முதல்வராக முடியவில்லை. ஆனாலும், நிர்பந்தம் எம்.எல்.ஏ பதவி மற்றும் ஆட்சி கலைந்து விடக்கூடாது என்பதற்காகவே அதிமுக எம்.எல்.ஏக்கள் எடப்பாடி பழனிச்சாமியை ஆதரித்ததாக கூறி வருகிறார்கள். உண்மை நிலை என்ன என தெரியவில்லை.
ஓ.பி.எஸ்-ற்கு எதிராக வாக்களித்தாலும், அதிமுக எம்.எல்.ஏக்களில் பலர் ஓ.பி.எஸ் மீது மிகுந்த அன்பும், மரியாதையும் வைத்துள்ளனர். ஆனால், ஓ.பி.எஸ் அணி பலமாக இருந்தால் மட்டுமே, ஆதரவு தெரிவிக்கும் சூழ்நிலையில் அவர்கள் இருப்பதை ஓ.பி.எஸ் அணி நன்றாகவே உணர்ந்துள்ளது.
எனவே, அதற்கேற்றார் போல் தற்போது காய் நகர்த்தி வருவதாக கூறப்படுகிறது. அதாவது, தேர்தல் ஆணையத்தின் உத்தரவு கண்டிப்பாக சசிகலாவிற்கு எதிராகவே திரும்பும். எனவே, பொதுச்செயலாளர் பதவியில் பன்னீர்செல்வத்தை அமர வைத்து விட்டால், கட்சியை கைப்பற்றலாம் என்ற முடிவில் பன்னீர்செல்வம் அணி நம்பிக்கையுன் இருக்கிறது. அதற்கேற்றார் போல் வியூகம் அமைக்கப்பட்டு வருகிறது.
அதிமுக சட்ட விதிகளின் படி பொதுச்செயலாளரை தேர்ந்தெடுக்க வேண்டும் என தேர்தல் ஆணையம் கூறிவிட்டால், கண்டிப்பாக ஓ.பி.எஸ் எளிதாக வெற்றி பெறுவார். எனவே, அதற்கான வேலையில் முன்னாள் அமைச்சர் கே.பி. முனுசாமி ஈடுபட்டுள்ளதாக செய்திகள் வெளிவந்துள்ளது.