பக்கங்கள்

பக்கங்கள்

16 ஜன., 2018

புலிகளுக்கு நிதி சேகரித்ததாக சந்தேகத்தில் 13 சுவிஸ் ஜெர்மனி வாழ் தமிழர்களுக்கு எதிரான வழக்கு விசாரணைகள் இன்றும்தொ டர்கின்றன


விடுதலைப் புலிகள் அமைப்பிற்கு நிதி சேகரித்ததாக 13 புலம்பெயர் தமிழர்களுக்கு எதிராக குற்றம் சுமத்தப்பட்டுள்ள குற்றச்சாட்டு தொடர்பாக விசாரணைகள் சுவிட்சர்லாந்து Belinzona வில் அமைந்துள்ள குற்றவியல் நீதிமன்றத்தில் இடம்பெற்று
வருகின்றன. கடந்த 8ஆம் திகதி ஆரம்பமான வழக்கு விசாரணைகள் நேற்றும் இடம்பெற்றன. குற்றஞ்சாட்டப்பட்ட அனைவரும் நேற்று தத்தமது சட்டத்தரணிகளுடன் நீதிமன்றில் முன்னிலையாகியிருந்தனர்
குற்றம் சுமத்தப்பட்டவர்களின் சுயவிபரங்கள் பற்றிய முழுமையான விசாரணைகள் நேற்று ஆரம்பமாகின.இதன் போது அவர்கள், தமிழர்களின் போராட்ட கால வரலாற்றை குறிப்பிட்டு தாயகத்தில் தாம் வாழ்ந்த காலம் தொடக்கம் சுவிட்சர்லாந்தில் அவர்களின் வாழ்க்கை வரை மிகவும் உணர்வுபூர்வமான முறையில் தமது சுயவிபரங்களை தெரிவித்தனர்.இந்த வழக்கு விசாரணைகள் தொடர்ந்து இன்று மதியம் வரை நடைபெறும். தொடர்ந்து இன்று பிற்பகல் இவர்கள் மீது சுமத்தப்பட்ட குற்றங்கள் சார்ந்த விசாரணைகள் ஆரம்பமாகவுள்ளன.