பக்கங்கள்

பக்கங்கள்

2 பிப்., 2018

மஹிந்தவைச் சிறையில் அடைத்தால் கொழும்பில் பிரச்சினை வெடிக்கும்! - எச்சரிக்கிறது ராவணா பலய

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவை ஒரு மணித்தியாலம் சிறையில் வைத்தால் கொழும்பில் பாரிய பிரச்சினைகள் வெடிக்கும் என்று ராவணா
பலய அமைப்பின் பிரதான அமைப்பாளர் இத்தேகந்தே சத்தாதிஸ்ச தேரர் எச்சரிக்கை விடுத்தார்
30 வருட காலம் இடம்பெற்ற யுத்தத்தினை முடிவிற்கு கொண்டு வந்து நாட்டினை ஒருமைப்படுத்தியவரது குடியுரிமையினை இல்லாதொழிப்பதற்கு நல்லாட்சி அரசாங்கம் கவனம் செலுத்துவது அரசியல் ரீதியான பழிவாங்கலாகவே காணப்படுகின்றது. முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் குடியுரிமை இரத்து செய்யப்படவேண்டும் என்றால் பிணைமுறி மோசடிக்காரர்களுக்கு காலி முகத்திடலில் மக்கள் மத்தியில் வைத்து கடுமையான தண்டனை வழங்க வேண்டும் என்றும் ராவணா பலய அமைப்பின் பிரதான அமைப்பாளர் இத்தேகந்தே சத்தாதிஸ்ச தேரர் தெரிவித்தார்