முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச திருப்பதியில் நேற்று வழிபாடு நடத்தினார். இரண்டு நாள் பயணமாக நேற்றுமுன்தினம் இந்தியா வந்த
மகிந்த ராஜபக்ச, சிறப்பு விமானத்தில் ரேனிகுண்டா வந்தடைந்தார். அங்கிருந்து காரில் திருப்பதிக்கு சென்றவர், நேற்றுக் காலை திருப்பதி ஏழுமலையானை தரிசனம் செய்துள்ளார். முக்கிய பிரமுகர்களுக்கான தரிசன பீடத்தில் ஏழுமலையானை தரிசித்த மகிந்தவுக்கு தேவஸ்தானம் சார்பில் பிரசாதங்கள் மற்றும் நினைவுப் பரிசுகள் வழங்கப்பட்டன |