பக்கங்கள்

பக்கங்கள்

4 செப்., 2018

விக்னேஸ்வரனை முதலமைச்சராக நீடிக்கவிட்டமையே தவறு ;சுமந்திரன்

வடமாகாணத்தில் முதலமைச்சராக சி.வி.விக்னேஸ்வரனை நீடிக்க விட்டமையே தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தலைமை செய்த தவறாகும் என அந்தக் கட்சியின் பேச்சாளரும் நாடாளுமன்ற உறுப்பினருமான எம்.ஏ. சுமந்திரன் தெரிவித்தார்.

மேலும், சமஸ்டித் தீர்வு வேண்டாம் என தான் ஒருபோதும் கூறவில்லை என்றும் எவ்வாறாயினும், இவ்விடயத்தை வைத்துக்கொண்டு சிலர் தற்போது அரசியல் செய்கிறார்கள் என்றும் அவர் கடுமையான சாடினார்.

நாடாளுமன்ற நிதிக்குழுவின் கூட்டம் யாழ்.மாவட்ட செயலகத்தில் (திங்கட்கிழமை) இடம்பெற்றது. இந்த கூட்டத்தை தொடர்ந்து ஊடகங்களுக்கு கருத்து வெளியிடும்போதே அவர் இவ்வாறு கூறினார்