பக்கங்கள்

பக்கங்கள்

22 அக்., 2018

அமைச்சரவை இரகசியங்களை ஊடகங்களுக்கு வெளியிடும் அமைச்சர்கள் குறித்து விசாரணை

அமைச்சரவை இரகசியங்களை ஊடகங்களுக்கு தெரிவிக்கும் அமைச்சர்கள் யார் என்பது குறித்து ஜனாதிபதியின்  கட்டளைக்கமைய
விசேட விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.
கடந்த அமைச்சரவை சந்திப்பின் போது, இந்தியாவின் ​“றோ“ அமைப்புக் குறித்த தகவலை 4 அமைச்சர்களிடம் இருந்து பெற்றுக்கொண்டதாக “ த ஹிந்து” நாளிதழின் செய்தியாளர் ஒருவர் தெரிவித்திருந்தார்.
இந்த நிலையில்,  இந்த விடயம் குறித்து, ஜனாதிபதியின் கட்டளைக்கமைய விசேட விசாரணைக் குழு அலைபேசி அழைப்புகள் உள்ளிட்ட பல வகைகளில் விசாரணைகளை ஆரம்பித்துள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.