பக்கங்கள்

பக்கங்கள்

22 அக்., 2018

டொல்பினை பிடித்த மீனவர் கைது

டொல்பின் ஒன்றை பிடித்து, படகிலேயே அதனை வெட்டி விற்பனைச் செய்வதற்காக சிலாபம் மீன் சந்தைக்கு ​கொண்டுவந்த மீனவர் ஒருவரை,
சிலாபம் பொலிஸார் இன்று (22)கைது செய்துள்ளனர்.
சிலாபம்-ரத்னஉயன பகுதியைச் சேர்ந்த, 22 வயதுடைய மீனவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார்.
குறித்த மீனவரிடமிருந்து, வெட்டப்பட்ட நிலையில் 24 கிலோ கிராம் நிறையுடைய டொல்பின் கைப்பற்றப்பட்டுள்ளது.
கைது செய்யப்பட்ட நபரை, சிலாபம் மாவட்ட நீதிமன்றில் முன்னிலைப்படுத்த பொலிஸார் நடவடிக்கை எடுத்துள்ளனர்.