பக்கங்கள்

பக்கங்கள்

6 மே, 2019

பறக்கிறது அநாமதேய தொலைபெசி அழைப்புக்கள்

யாழ்.உடுவில் பிரதேசசபையில் குண்டுவைக்க உள்ளதாக தொலைபேசி ஊடாக அச்சுறுத்தல் விடுக்கப்பட்ட நிலையில், சபையில் இடம்பெறவிருந்த கூட்டம் நிறுத்தப்பட்டுள்ளது.தொடர்ந்து விசேட அதிரடிப்படையினர் மற்றும் பொலிஸார்், இராணுவம் குவிக்கப்பட்டு தேடுதல் நடத்தப்பட்டுள்ளதுடன், பிரதேசசபைக்கு பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டிருக்கின்றது.

இன்று காலை 10 மணியளவில் பிரதேசசபையில் அபிவிருத்தி தொடர்பாக விசேட கூட்டம் ஒன்று சபையில் இடம்பெற்ற ஏற்பாடாகியிருந்தது. இந்நிலையில் பிரதேசசபையின் பொதுமக்கள் தொடர்பு அலுவலருக்கு தொலைபேசி அழைப்பினை எடுத்த நபரொருவர் கூட்டம் நடைபெற்றால் சபைக்குள் குண்டு வெடிக்கும் என அச்சுறுத்தியுள்ளார்