பக்கங்கள்

பக்கங்கள்

1 ஜூலை, 2019

ண்டியில் 10 ஆயிரம் பிக்குகள் கலந்து கொள்ளும்-பொதுபல சேனா!

கண்டி - தலதா மாளிகை திடலில் எதிர்வரும் ஜுலை மாதம் 7 ஆம் திகதி பௌத்த பிக்குகள் மாநாடு ஒன்றை பொதுபல சேனா அமைப்பு ஏற்பாடு செய்துள்ளது. சுமார் ஒரு இலட்சம் பொது மக்கள் மற்றும் 10 ஆயிரம் பிக்குகள் கலந்து கொள்ள உள்ளஇந்த மாநாட்டில் முக்கியமான தீர்மானங்கள் எடுக்கப்பட உள்ளதாக கூறப்படுகிறது.
இலங்கையில் இஸ்லாமிய அடிப்படைவாதத்தை இல்லாதொழிக்கவும் அனைத்து இன மக்களையும் ஒரு சட்டத்திற்கு கீழ் கொண்டு வருவதுமே இந்த மாநாட்டின் முக்கிய நோக்கம் என்று பொது பலசேனா தெரிவித்துள்ளது.

இதன்போது முஸ்லிம் மக்களின் ஆடை விவகாரம், ஹலால், மத்ரஷா, காதிக்கோர்ட் சட்டம் மற்றும் தௌஹீத் பள்ளிவாசல்கள் உள்ளிட்ட பல்வேறு விடயங்களுக்கு எதிராக தீர்மானம் மேற்கொள்ளப்பட்டு அரசாங்கத்திடம் கையளிக்கப்பட உள்ளதாக குறிப்பிடப்படுகின்றது