பக்கங்கள்

பக்கங்கள்

6 ஜூன், 2019

நெடுந்தீவு கூட்டமைப்பின் தீவிர ஆதரவாளர் சடலமாக மீட்பு!

தமிழ்தேசியக்கூட்டமைப்பின் தீவிர ஆதரவாளர் நடேசு ஆனந்தகுமாரன்(50) சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.

நெடுந்தீவு 5 ஆம் வட்டாராத்தினை சேர்ந்த கூட்டமைப்பின் ஆதரவாளரான இவர் வீட்டில் இருந்து மர்மமான முறையில் உயிரிழந்த நிலையில் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.

தனிமையில் வாழ்ந்து வந்த இவர் அயலவர்கள் நீண்ட தூரங்களில் வாழ்ந்து வருவதால் இவர் எவ்வாறு உயிரிழந்துள்ளார் என்பது தொடர்பில் நெடுந்தீவு காவல் துறை விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றார்கள்.

சடலம் பிரேத பரிசேதனைக்காக யாழ் பொது மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்டப்டுள்ளது.