பக்கங்கள்

பக்கங்கள்

4 ஜூன், 2019

ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடப் போவதில்லை - மைத்திரி அதிரடி அறிவிப்பு!

அடுத்த ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிடப் போவதில்லை என்று ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன இன்று நடைபெற்ற அமைச்சரவைக் கூட்டத்தில்
அறிவித்துள்ளார். அத்துடன், மஹிந்த ராஜபக்ஷ தலைமையிலான ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவை ஆதரிக்கப் போவதில்லை எனவும் அவர் திட்டவட்டமாக தெரிவித்துள்ளார்
கடந்த ஆண்டு இடம்பெற்ற ஆட்சி கவிழ்ப்பு சதி முயற்சி மற்றும் ஈஸ்டர் ஞாயிறு தாக்குதலை அடுத்து ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மீது கடுமையான விமர்சங்கள் எழுந்துள்ளன. இந்நிலையில் கடந்த வார இறுதியில் புதுடெல்லியில் நடைபெற்ற ஊடக சந்திப்பிலும் ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடுவது குறித்து தீர்மானிக்கவில்லை என மைத்திரிபால சிறிசேன கூறியிருந்தார்.