பக்கங்கள்

பக்கங்கள்

11 ஜூன், 2019

யாழில்,வீதியால் சென்ற யுவதியின் சங்கிலி அறுப்பு

யாழ்ப்பாணம் புங்கன்குளம் பகுதியில் வீதியால் சென்ற யுவதியின் சங்கிலியை இளைஞர்கள் அறுத்துச் சென்றுள்ளனர்.
இந்த சம்பவம் நேற்று நண்பகல் இடம்பெற்றுள்ளது. புங்கன்குளம் வில்வெந்தெரு வீதியால் யுவதி நடந்துசென்று கொண்டிருந்த வேளையிலேயே இந்த சங்கிலி அறுப்புச் சம்பவம் இடம்பெற்றுள்ளது.

மோட்டார் சைக்கிளில் வந்த இளைஞர்கள் இருவர் நடந்துசென்ற பெண்ணின் சங்கிலியை அறுத்துள்ளனர். சங்கிலி துண்டுகளான நிலையில், சங்கிலியில் இருந்த பென்டன் கழன்று விழுந்து விட்டது. துண்டுகளாக அறுந்த சங்கிலியை மோட்டார் சைக்கிளில் வந்த இரு இளைஞர்கள் கொண்டு சென்றுள்ளனர்