பக்கங்கள்

பக்கங்கள்

4 ஜூன், 2019

ஆட்சியைப் பிடிக்க முனையும் கும்பலே இனவாதிகளை இயக்குகிறது! - சம்பந்தன்

ஈஸ்டர் ஞாயிறு தாக்குதல்களின் பின்னர்- அதனைச் சந்தர்ப்பமாகப் பயன்படுத்திக் கொண்டு இனவாதிகள் நாட்டைத் தமது கைகளுக்குள் கொண்டு வந்துள்ளனர் என்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் தெரிவித்துள்ளார்.
ஈஸ்டர் ஞாயிறு தாக்குதல்களின் பின்னர்- அதனைச் சந்தர்ப்பமாகப் பயன்படுத்திக் கொண்டு இனவாதிகள் நாட்டைத் தமது கைகளுக்குள் கொண்டு வந்துள்ளனர் என்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் தெரிவித்துள்ளார்.

அவர்களின் மிரட்டல்கள் நாளுக்கு நாள் அதிகரித்து வருகின்றது. ஆட்சியைப் பிடிக்க முயலும் ஒரு கும்பல் தான் இந்த இனவாதிகளை பின்புலத்தில் இருந்து இயக்குகின்றனர்.

நாட்டில் மீண்டுமொரு இனக்கலவரத்தை ஏற்படுத்துவதில் அவர்கள் குறியாகவுள்ளனர் போல் தெரிகின்றது. எனவே, இதனை ஜனாதிபதி, பிரதமர் உள்ளிட்ட அரச தரப்பினர் வேடிக்கை பார்க்காது மிரட்டல்களுக்கு அடிபணியாது உடன் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

ஜனாதிபதியாலும் பிரதமர் தலைமையிலான அரசாலும் நியமிக்கப்பட்டவர்கள் மீது குற்றச்சாட்டுக்கள் முன்வைத்தால் அவர்கள் தொடர்பில் ஜனாதிபதியும், அரசும் தான் முடிவெடுக்க வேண்டும். எவரும் அழுத்தங்களை பிரயோகிக்க முடியாது. இந்தக் குற்றச்சாட்டுக்கள் தொடர்பில் ஜனாதிபதி, பிரதமர், சபாநாயகர் ஆகியோரின் கூட்டு முயற்சியால் நியமிக்கப்பட்ட நாடாளுமன்றத் தெரிவுக்குழு விசாரணை நடத்தி வருகின்றது. ஆனால், இனவாதிகள் இதற்கு எதிர்மாறாகச் செயற்பட்டு வருகின்றனர்.

இது நாட்டின் நன்மதிப்புக்கு நல்லதல்ல. இது தொடர்பில் அரசு உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என தெரிவித்துள்ளார்