ரிஷாத், ஹிஹ்புல்லாஹ், அசாத்துக்கு எதிராக ஐந்து முறைப்பாடுகள்!
முன்னாள் ஆளுனர்களான ஹிஷ்புல்லாஹ், அசாத் சாலி மற்றும் அமைச்சர் ரிசாத் பதியுதீன் ஆகியோருக்கு எதிராக இன்று மாலை வரை 5 முறைப்பாடுகள் பதிவாகியுள்ளதாக காவல் துறை தலைமையகம் தெரிவித்துள்ளது.
இவ்வாறாக முறைப்பாடுகளை பெறுவதற்காக பொலிஸ் தலைமையகத்தினால் சிரேஷ்ட காவல் துறை உத்தியோகத்தர்கள் மூவரடங்கிய குழு கடந்த 4 ஆம் திகதி நியமிக்கப்பட்டது.
இந்த முறைப்பாடுகள் தொடர்பிலான விசாரணைகளை குற்ற புலனாய்வு பிரிவினர் மேற்கொண்டு வருகின்றனர்.