பக்கங்கள்

பக்கங்கள்

15 ஜூலை, 2019

யாழில் பிரதமர் ரணில்! -ஸ்கந்தா பாடசாலைக் கட்டத்திற்கு அடிக்கல் நாட்டினார்-

யாழ்ப்பாணத்திற்கு இன்று வருகைதந்த நாட்டின் பிரதமர் ரணில் விக்கிரமசிங்கா சுன்னாகம் ஸ்கந்தவரோதய கல்லூரிக்கு பொது நோக்கு மண்டபத்துக்கு அடிக்கல் நாட்டி வைத்துள்ளார்.


இன்று திங்கட்கிழமை காலை ஸ்கந்வராதோய பாடசாலையின் 25 ஆவது ஆண்டு விழா நடைபெற்றது. இந்நிகழ்வில் பிரதம அதிதியாக கலந்து கொண்ட போதே பிரதமர் 5.5 தில்லியின் ரூபா செலவில் புதிதாக அமைக்கப்பட்டுள்ள பொது நோக்கு மண்டபத்திற்கு அடிக்கல்லையும் நாட்டி வைத்தார்.

1

மேலும் இந் நிகழ்வில் கல்வி இராஜாங்க அமைச்சர் விஜயகலா மகேஸ்வரன், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் மாவை சேனாதிராச, தர்மலிங்கம் சித்தார்த்தன், ஈஸ்வரபாதம் சரவணபவன் உட்பட கல்வி அதிகாரிகள் மாணவர்கள் பெற்றோர்கள் எனப் பலரும் கலந்து கொண்டிருந்தனர்