பக்கங்கள்

பக்கங்கள்

21 ஜூலை, 2019

சம்பந்தனை அழைக்கவில்லை! - மனோ

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கும் தமிழ் நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கும் இடையில் தாம் ஒழுங்கு செய்திருந்த கூட்டத்துக்கு, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தனுக்குத் தான் அழைப்பு விடுக்கவில்லை என அமைச்சர் மனோ கணேசன் தெரிவித்துள்ளார்.
ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கும் தமிழ் நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கும் இடையில் தாம் ஒழுங்கு செய்திருந்த கூட்டத்துக்கு, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தனுக்குத் தான் அழைப்பு விடுக்கவில்லை என அமைச்சர் மனோ கணேசன் தெரிவித்துள்ளார்.

கன்னியா விவகாரம் உள்ளிட்ட பல்வேறு விடயங்கள் குறித்து ஜனாதிபதிக்கும் தமிழ் நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கும் இடையிலான சந்திப்பொன்றை அமைச்சர் மனோ கணேசன் ஏற்பாடு செய்திருந்தார். இந்த சந்திப்பு தொடர்பாக கடந்த புதன்கிழமை இரவு தமிழ் நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு மனோ கணேசனால் அறிவிக்கப்பட்டது.

எனினும் வியாழக்கிழமை இடம்பெற்ற இந்த சந்திப்பில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் பங்கேற்கவில்லை.

தமிழ் தேசிய கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தனுக்கு எந்தவொரு தரப்பினரும் கூட்டத்துக்கு அழைப்பு விடுக்கவில்லை. அதன் காரணமாகவே கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் எவரும் ஜனாதிபதியுடனான சந்திப்பில் கலந்துகொள்ளவில்லை என கூட்டமைப்பின் பேச்சாளரும் நாடாளுமன்ற உறுப்பினருமான எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்திருந்தார்.

தான் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தனுக்கு ஜனாதிபதியுடனான சந்திப்பு குறித்து தெரியப்படுத்தவில்லை என்றும் கூட்டமைப்பின் பேச்சாளர் எம்.ஏ.சுமந்திரனுக்கு மட்டுமே அறிவித்ததாகவும் அமைச்சர் மனோ கணேசன் தெரிவித்துள்ளார்.

அதை அந்தக் கட்சியின் உத்தியோகபூர்வ அழைப்பாக எடுத்துக் கொள்வார்கள் என்று தான் நினைத்ததாகவும் அமைச்சர் மனோ கணேசன் கூறியுள்ளார்.