பக்கங்கள்

பக்கங்கள்

24 ஆக., 2019

திருப்பி அனுப்பப்பட்ட தூக்கு காவடிகள்!


நல்லூர் கந்தன் ஆலயத்தின் வருடாந்த திருவிழாவில் இன்று கார்த்திகைத் திருவிழாவை முன்னிட்டு, தூக்கு காவடி எடுத்து வந்த பக்தர்கள் செட்டித் தெருச் சந்தியுடன் தடுத்து நிறுத்தப்பட்டனர். இம்முறை ஆலயத்தில் பாதுகாப்பு நடவடிக்கைகள் இறுக்கமாக இருப்பதால் பொலிஸார் தூக்கு காவடிகளை ஆலயத்துக்கு அண்மையில் அனுமதிக்க மறுத்து வருகின்றனர்
இன்று 3 தூக்குகாவடிகள் பருத்தித்துறை வீதி வழியாக வந்த நிலையில், முதலாவது தடையைத் தாண்டி உள்ளே செல்ல அனுமதிக்கப்பட்ட போதும், செட்டித்தெருச் சந்தி அருகில் அமைக்கப்பட்டிருக்கும் பந்தலைத் தாண்டிச் செல்ல அனுமதிக்க முடியாது என்று பொலிஸார் தடுத்து நிறுத்தினர். இதனால் பக்தர்கள், ஆலய வீதியைக் கூட சென்றடைய முடியாமல், தமது நேர்த்திக்கடனை நிறைவேற்ற வேண்டிய நிலை ஏற்பட்டது.