பக்கங்கள்

பக்கங்கள்

19 நவ., 2019

சிறிலங்காவின் புதிய ஜனாதிபதி தனது கடமைகளை இன்று ஆரம்பிப்பார்

சிறிலங்காவின் புதிய ஜனாதிபதியாக தெரிவு செய்யப்பட்டுள்ள கோட்டபய ராஜபக்ஷ இன்று (19) தனது கடமைகளை உத்தியோகப்பூர்வமாக ஆரம்பிக்கவுள்ளார்.

அதற்கமைய அவர் ஜனாதிபதி செயலகத்தில் இன்று தனது கடமைகளை பொறுப்பேற்ற உள்ளார்.

புதிய ஜனாதிபதியின் செயலாளராக பி.பீ. ஜயசுந்தர தெரிவு செய்யப்படவுள்ள நிலையில், புதிய பாதுகாப்புச் செயலாளராக மேஜர் ஜெனரல் கமல் குணரத்ண தெரிவு செய்யப்படலாம் என தெரிவிக்கப்படுகின்றது.

சிறிலங்கா ஜனாதிபதி தனது கடமைகளை ஏற்றுக் கொண்டதன் பின்னர் இந்த நியமனங்கள் வழங்கப்படலாம் என தெரிவிக்கப்படுகின்றது.