பக்கங்கள்

பக்கங்கள்

23 பிப்., 2020

ஜெனிவா செல்லும் தமிழ்ப் பிரதிநிதிகள்

தமிழ் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் ஸ்ரீதரன் உள்ளிட்ட தரப்பினர் ஐ.நா மனித உரிமைகள் பேரவைக் கூட்டத் தொடரில் பங்கேற்பதற்காக ஜெனிவா செல்லவுள்ளனர். நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் ஸ்ரீதரன் நாளை மறுதினம் ஜெனிவா செல்லவுள்ளார்.

தமிழ் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் ஸ்ரீதரன் உள்ளிட்ட தரப்பினர் ஐ.நா மனித உரிமைகள் பேரவைக் கூட்டத் தொடரில் பங்கேற்பதற்காக ஜெனிவா செல்லவுள்ளனர். நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் ஸ்ரீதரன் நாளை மறுதினம் ஜெனிவா செல்லவுள்ளார்.

இதேவேளை, வடக்கு, கிழக்கு வலிந்து காணாமலாக்கப்பட்ட சங்கங்களின் தலைவி கலாரஞ்சனி, செயலாளர் லீலாவதி மற்றும் ஆனந்த நடராஜா, மட்டக்களப்பு மாவட்ட வலிந்து காணாமலாக்கப்பட்ட உறவுகளின் சங்கத் தலைவி அமலநாயகி ஆகியோரும் ஜெனிவா செல்லவுள்ளனர்.

எதிர்வரும் நாட்களில் ஜெனிவா செல்லும் இவர்கள், வலிந்து காணாமலாக்கப்பட்ட உறவுகளுக்கான பொறுப்புக்கூறலை இலங்கை அரசாங்கம் செய்வதற்கு சர்வதேச நாடுகள் அழுத்தங்களைப் பிரயோகிக்க வேண்டும் என்ற கோரிக்கையை முன்வைத்து ஐ.நா. அரங்கினுள் கருத்துக்களை முன்வைக்கவுள்ளனர்.