பக்கங்கள்

பக்கங்கள்

28 ஏப்., 2020

முஸ்லிம் மாணவன் பௌத்த சமய பாடத்தில் ‘ஏ’ சித்தி பெற்று சாதனை8 ‘ஏ’ 1 பாடத்தில் ‘பி’ சித்தி

நேற்று வெளியாகிய க.பொ.த சாதாரணதர பரீட்சை பெறுபேறுகளில் முஸ்லிம் மாணவன் பௌத்த சமய பாடத்தில் ‘ஏ’ சித்தி பெற்று சாதனை படைத்துள்ளார்.

குருநாகல் மலியதேவ கல்லூரியில் க.பொ.த சாதாரணதர பரீட்சைக்கு தோற்றியிருந்த சம்மாந்துறையை பிறப்பிடமாகவும் குருநாகல் கிரிஉல்ல பிரதேசத்தை வசிப்பிடமாகவும் கொண்ட மொஹமட் றிஸ்மி மொஹமட் றஸ்லான் என்ற மாணவனே இந்த சாதனையை படைத்துள்ளார்.

அத்துடன் குறித்த மாணவன் 8 பாடங்களில் ‘ஏ’ சித்தியும் 1 பாடத்தில் ‘பி’ சித்தியும் பெற்றுள்ளார்.

புலமைப்பரீட்சையில் சித்தியடைந்து குறித்த பாடசாலைக்கு தெரிவாகிய குறித்த மாணவன் இஸ்லாம் பாடத்தை கற்பதற்கான சூழ்நிலை அந்த பாடசாலையில் கிடைக்காததன் காரணமாகவே புத்த சமய பாடத்தை கற்று அதில் ‘ஏ’ சித்தி பெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது