பக்கங்கள்

பக்கங்கள்

19 ஏப்., 2020

கொரோனாவிலிருந்து மீண்ட இருவர்; நாளை வீட்டுக்கு செல்கிறார்கள்

கொரோனாவிலிருந்து மீண்ட இருவர்; நாளை வீட்டுக்கு செல்கிறார்கள
யாழ்ப்பாணத்தில் கொரோனோ வைரஸ் தொற்று அடையாளம் காணப்பட்டவர்களில் இருவர் தற்போது குணமடைந்த நிலையில் நாளை ஞாயிற்றுக்கிழமை அவர்களது வீடுகளுக்கு அழைத்துவரப்பட உள்ளனர்.

வெலிகந்த ஆதார வைத்தியசாலையில் சிகிச்சை பெற்றுவரும் இருவர் பூரண குணமடைந்த நிலையில் நாளை யாழ்ப்பாணத்திலுள்ள அவர்களது வீடுகளுக்கு அழைத்துவரப்படவுள்ளனர்.


அதே நேரத்தில் சிகிச்சையில் பூரண குணமடைந்து வீடுகளுக்கு அனுப்பி வைக்கப்படுகின்ற குறித்த இருவரும் தொடர்ந்தும் 13 நாட்கள் அவர்களது வீடுகளிலேயே இருப்பார்கள்.