பக்கங்கள்

பக்கங்கள்

11 டிச., 2020

பொருளாதாரத் தடைகளை விதிக்குமாறு சர்வதேசத்திடம் கோரிக்கை

www.pungudutivuswiss.com
தேர்தல் ஆணைக்குழுவின் முன்னாள் உறுப்பினர் ரட்ணஜீவன் ஹூல் இலங்கைக்கு எதிராக பொருளாதார தடைகளை விதிக்குமாறும் இலங்கைக்கு எதிராக சுமத்தப்பட்டுள்ள போர் குற்றச்சாட்டுக்களை விசாரிக்குமாறும் சர்வதேசத்திடம் கோரிக்கை விடுத்துள்ளார் என சிங்கள இணையத்தளம் ஒன்று தகவல் வெளியிட்டுள்ளது.
அதில், இலங்கையில் நடந்த போர் குற்றங்களுக்கு சாட்சியங்கள் இருப்பதாகவும் போர் குற்றங்களில் ஈடுபட்டவர்கள் உயர் பதவிகளில் இருப்பதாகவும் அவர் கூறியுள்ளார்.

தமிழ் மக்கள் தமது இறந்த உறவினர்களை நினைவுக் கூர தற்போதைய அரசாங்கம் இடமளிப்பதில்லை எனவும் ஜெனிவா யோசனைகளை நிறைவேற்ற அரசாங்கம் நடவடிக்கை எடுக்கவில்லை எனவும் அவர் கூறியுள்ளார்.