பக்கங்கள்

பக்கங்கள்

26 டிச., 2020

முழங்காவில் பகுதியில் இளைஞன் கொலை

www.pungudutivuswiss.com
கிளிநொச்சி - முழங்காவில் பகுதியில் கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்டு, ஒருவர் கொலை செய்யப்பட்டுள்ளார்
இன்று காலை 10 மணியளவில் பல்லவராயன் கட்டு சோலை மாதிரி கிராமம் பகுதியில் இந்தச் சம்பவம் இடம்பெற்றுள்ளது.
செல்வரத்தினம் பிரதீபன் என்ற 32 வயதுடைய இளைஞரே உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.


கிளிநொச்சி - முழங்காவில் பகுதியில் கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்டு, ஒருவர் கொலை செய்யப்பட்டுள்ளார் இன்று காலை 10 மணியளவில் பல்லவராயன் கட்டு சோலை மாதிரி கிராமம் பகுதியில் இந்தச் சம்பவம் இடம்பெற்றுள்ளது. செல்வரத்தினம் பிரதீபன் என்ற 32 வயதுடைய இளைஞரே உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

உயிரிழந்தவரின் சடலத்தின் கழுத்து பகுதியில் முறிவுகள் காணப்படுவதாகவும் கால் பகுதியில் வெட்டுக்காய்கள் காணப்படுவதாகவும் பொலிஸார் குறிப்பிடுகின்றனர்.

மேலும், சடலம் முழங்காவில் வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளதுடன் பிரேத பரிசோதனைகளின் பின்னர் உறவினர்களிடம் கையளிக்கப்படவுள்ளது. குறித்த சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேகநபரை கைது செய்த முழங்காவில் பொலிஸார், மேலதிக விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.