பக்கங்கள்

பக்கங்கள்

8 ஜன., 2021

யாழ். பல்கலை முன்றலில் திரண்ட நூற்றுக்கணக்கானோர்! பொலிஸ் - இராணுவம் குவிப்பு

www.pungudutivuswiss.com
யாழ். பல்கலைக்கழகத்தில் அமைக்கப்பட்ட முள்ளிவாய்க்கால் நினைவிடம் நிர்வாகத்தால் இரவோடு இரவாக இடித்தழிக்கப்படுவதை அறிந்து மாணவர்களும் அரசியல் பிரதிநிதிகளும் ஆர்வலர்களும் பல்கலைக்கழக பிரதான வாயிலில் திரண்டவண்ணமுள்ளனர்.
அத்துடன், கோப்பாய் பொலிஸாரும் இராணுவமும் பல்கலைக்கழக வாயிலில் குவிக்கப்பட்டுள்ளனர்.
பல்கலைக்கழக வளாகத்துக்குள் நுழைய எவருக்கும் பாதுகாப்புப் பிரிவினர் அனுமதியளிக்கவில்லை.
பின்னர் வருகை தந்த பொலிஸாரும் எவரையும் உள்ளே செல்வதற்கு அனுமதி மறுத்தனர்.
இதனால் பல்கலைக்கழக பிரதான வாயிலில் பரபரப்பு நிலை இன்றிரவு 9 மணி தொடக்கம் ஏற்பட்டுள்ளது.