பக்கங்கள்

பக்கங்கள்

20 மே, 2021

புதுக்குடியிருப்பு ஆடைத் தொழிற்சாலை ஊழியர்கள் 400 பேர் தலைமறைவு

www.pungudutivuswiss.com
முல்லைத்தீவு - புதுக்குடியிருப்பு ஆடைத் தொழிற்சாலை கொத்தணியுடன் தொடர்புடைய 400க்கும் அதிகமான ஊழியர்கள், பிசிஆர் பரிசோதனைகளுக்கு ஒத்துழைக்காமல் தலைமறைவாகியுள்ளனர் என்று கூறப்படுகிறது.
இதனால் சமூகத்தில் தொற்று மேலும் பரவலடையும் அபாயம் ஏற்பட்டுள்ளது. அவர்களை வலைவீசி பிடிக்கும் பணியில் இராணுவத்தினர் களமிறக்கப்பட்டுள்ளனர்.


முல்லைத்தீவு - புதுக்குடியிருப்பு ஆடைத் தொழிற்சாலை கொத்தணியுடன் தொடர்புடைய 400க்கும் அதிகமான ஊழியர்கள், பிசிஆர் பரிசோதனைகளுக்கு ஒத்துழைக்காமல் தலைமறைவாகியுள்ளனர் என்று கூறப்படுகிறது. இதனால் சமூகத்தில் தொற்று மேலும் பரவலடையும் அபாயம் ஏற்பட்டுள்ளது. அவர்களை வலைவீசி பிடிக்கும் பணியில் இராணுவத்தினர் களமிறக்கப்பட்டுள்ளனர்.

அத்துடன், புதுக்குடியிருப்பு, முல்லைத்தீவு, முள்ளியவளை ஆகிய பொலிஸ் பிரிவுகள் கடந்த 17ஆம் திகதி இரவு 11 மணி தொடக்கம் தனிமைப்படுத்தப்பட்டுள்ள பகுதிகளாக அறிவிக்கப்பட்டு, இன்றுடன் இரண்டு நாட்கள் கடந்துள்ள நிலையிலும், மக்கள் தனிமைப்படுத்தல் விதியை சரியாக நடைமுறைப்படுத்த தவறிவருவதாகவும் குற்றஞ்சாட்டப்பட்டுள்ளது.