கிங் மேக்கராகும் சிங்! - பரபரப்பான இறுதி நேர கருத்துக்கணிப்பு.
கனடாவில் நாளை நடைபெறவுள்ள பொதுத் தேர்தலில், ஆளும் லிபரல் கட்சிக்கு 150 ஆசனங்களே கிடைக்கும் என்று சிபிசி கருத்துக் கணிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இது ஆட்சியமைப்பதற்கு தேவையான 170 ஆசனங்களை விட, 20 ஆசனங்கள் குறைவாகும். கடந்த தேர்தலை விட 7 ஆசனங்கள் குறைவாக, இம்முறை லிபரல் கட்சிக்கு கிடைக்கும் என்றும் சிபிசி கருத்துக் கணிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது
மேலும், எரின் ஓ டூல் தலைமையிலான கொன்சர்வேட்டிவ் கட்சிக்கு 3 ஆசனங்கள் குறைவாக, 118 ஆசனங்கள் கிடைக்கும் என்றும் அந்த கருத்துக் கணிப்பில் தெரியவந்துள்ளது. இந்த நிலையில் என்டிபியே கிங் மேக்கராக மாறும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.