பக்கங்கள்

பக்கங்கள்

18 அக்., 2021

நிசாந்தனை விசாரணைக்கு அழைக்கிறது ரிஐடி!

www.pungudutivuswiss.com

தமிழ் தேசிய கட்சியின் தேசிய அமைப்பாளர் சுவீகரன் நிசாந்தனை விசாரணைக்காக பயங்கரவாத விசாரணைப் பிரிவு அழைத்துள்ளது. எதிர்வரும் 20ஆம் திகதி விசாரணை ஒன்றிற்கான வாக்குமூலத்தை வழங்க கொழும்புக்கு வருமாறு அழைக்கப்பட்டுள்ளதாக சுவீகரன் நிசாந்தன் கூறியுள்ளார்.

தமிழ் தேசிய கட்சியின் தேசிய அமைப்பாளர் சுவீகரன் நிசாந்தனை விசாரணைக்காக பயங்கரவாத விசாரணைப் பிரிவு அழைத்துள்ளது. எதிர்வரும் 20ஆம் திகதி விசாரணை ஒன்றிற்கான வாக்குமூலத்தை வழங்க கொழும்புக்கு வருமாறு அழைக்கப்பட்டுள்ளதாக சுவீகரன் நிசாந்தன் கூறியுள்ளார்.

மட்டக்களப்பு கல்லடியிலுள்ள தமிழ் கட்சியின் தேசிய அமைப்பாளரின் வீட்டுக்கு நேற்று பயங்கரவாதத் தடுப்புப் பிரிவினர் சென்றிருந்த நிலையில், அவர் வீட்டில் இல்லாத காரணத்தினால், 20ஆம் திகதி கொழும்பு 05இல் உள்ள கிருலப்பனை பேஸ்லைன் வீதியிலுள்ள குறித்த காரியாலயத்துக்கு வருமாறும் அறிவுறுத்தியுள்ளனர்.