பக்கங்கள்

பக்கங்கள்

12 டிச., 2021

கஞ்சாவுடன் சிக்கினார் பொலிஸ் சார்ஜன்ட்! [Sunday 2021-12-12 07:00]

www.pungudutivuswiss.com



ஒரு மில்லியன் ரூபாவிற்கும் அதிகமான பெறுமதியான கேரளா கஞ்சாவை கடத்திய குற்றச்சாட்டில் காவல்துறை சார்ஜன்ட் உட்பட இருவர் புளியங்குளம் பகுதியில் வைத்து விசேட அதிரடிப்படையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

ஒரு மில்லியன் ரூபாவிற்கும் அதிகமான பெறுமதியான கேரளா கஞ்சாவை கடத்திய குற்றச்சாட்டில் காவல்துறை சார்ஜன்ட் உட்பட இருவர் புளியங்குளம் பகுதியில் வைத்து விசேட அதிரடிப்படையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர்

புளியங்குளம் ஸ்ரீ முத்துக்குமார நகரப் பகுதியில் சுமார் 7 கிலோ கேரளா கஞ்சாவுடன் சந்தேகநபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

விசாரணைகளின் போது, அவருக்கு கஞ்சாவை வழங்கியதாகக் கூறப்படும் ஓமந்தை காவல்நிலையத்தில் கடமையாற்றும் சார்ஜன்ட் ஒருவரை விசேட அதிரடிப்படையினர் கைது செய்துள்ளனர். கைது செய்யப்பட்ட இருவரும் மேலதிக விசாரணைகளுக்காக வவுனியா காவல்துறையினரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளனர்.